search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அராஜகத்தில் ஈடுபடும் தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியாது - ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்
    X

    அராஜகத்தில் ஈடுபடும் தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியாது - ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

    திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாகவும் அராஜகத்தில் ஈடுபடும் அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது எனவும் தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam #ADMK #DMK
    சென்னை:

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெரிய ஆலங்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இதற்கு முன்னாடி தமிழகத்தை பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்துள்ளது. யார் நல்லாட்சி தந்து, நல்ல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தார்கள், யார் மக்களுக்கு தேவையான, பல்நோக்கு திட்டங்களை தந்தார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

    எதிர்கட்சியினர் தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சி காணாமல் போய் விடும். ஆட்சி கலைந்து விடும் என்று கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள்,

    அ.தி.மு.க.வுக்கு என்று ஒரு சிறப்பு இருக்கிறது. 28 ஆண்டுகளாக, பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரின் ஆதரவோடு ஆளுகின்ற ஒரே கட்சியாக அ.தி.மு.க. திகழ்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2011 வரைக்கும் எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள், எந்த திட்டத்தை முடித்தார்கள் என்று வாக்கு சேகரிக்க வரும் தி.மு.க.காரர்களிடம் கேளுங்கள்.

    ஜெயலலிதா ஆட்சியேற்றவுடன் ஒரே வருடத்தில் படிப்படியாக மின்வெட்டினை குறைத்து, மின்வெட்டினை இல்லாத மாநிலமாக உருவாக்கி, தற்போது உபரி மாநிலமாக, அண்டை மாநிலங்களுக்கு 3000 மெகா வாட் மின்சாரத்தினை வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

    எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பல திட்டங்களை போட்டு முதல்வராக கனவு கண்டுக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரால் முடியுமா?



    முடியாது, ஏனென்றால் மக்கள் அனைவரும் திமுக கட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர். தி.மு.க. அராஜகத்தில் ஈடுபடுவதால் மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நீங்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #OPanneerselvam #ADMK #DMK
    Next Story
    ×