search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி படுகொலை
    X

    நத்தம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி படுகொலை

    நத்தம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நத்தம்:

    நத்தம் சேர்வீடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா (வயது 62). விவசாயி. இவர் நேற்று இரவு தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு சென்று விட்டனர். இன்று காலையில் பார்த்தபோது செல்லப்பா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செல்லப்பாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக தெரிய வந்துள்ளது. அதன் பேரில் அவரை படுகொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்படடு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×