search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரியனும், கையும் இணைந்தால் எப்போதும் வெற்றிதான்- மு.க.ஸ்டாலின் பிரசாரம்
    X

    சூரியனும், கையும் இணைந்தால் எப்போதும் வெற்றிதான்- மு.க.ஸ்டாலின் பிரசாரம்

    சூரியனும் கையும் இணைந்தால் எப்போதும் வெற்றிதான் என்று காக்களூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசினார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மத்தியில் நடைபெறும் மோடி ஆட்சியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப மக்கள் கிளர்ந்தெழுந்து உள்ளனர்.

    சூரியனும் கையும் இணைந்தால் எப்போதும் வெற்றிதான். எங்கள் கூட்டணி ஏற்கனவே தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செய்து உள்ளது.

    தமிழ்நாட்டில் பெயர் சொல்லும் அளவுக்கு ஏதாவது வளர்ச்சி பணிகள் செய்ததுண்டா. பதவியை பாதுகாத்துக் கொள்ள கூட்டணி வைத்து உள்ளனர்.

    இந்திய ராணுவ வீரர்களை காப்பாற்ற முடியவில்லை இவர்கள் வலிமையான மத்திய அரசு உள்ளது என கூறி வருகின்றனர்.

    திராவிட கட்சிகளை வசை பாடி வந்த டாக்டர் ராமதாஸ் தற்போது கூட்டணி சேர்ந்தவுடன் தமிழக அரசு சிறப்பான ஆட்சி செய்து வருகிறது என கூறி வருகிறார்.

    மேலும் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாகவும் சொல்கிறார். யாருடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது என மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூபாய் 2000 தரப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    அதை அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு அறிவித்து கொடுத்து இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 10 நாட்கள் முன்பு அறிவித்து மோசடித்தனம் செய்கிறார். இதனை தற்போது தி.மு.க.தான் நிறுத்தி விட்டது என்று எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்.

    இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் பிரதமர் நரேந்திர மோடியையும் எடப்பாடி பழனிசாமியையும் தரக்குறைவாக பேசுவதாக கூறி வருகிறார்கள். கலைஞர் என்னை அப்படி வளர்க்கவில்லை.

    விவசாயிகள் 100 நாட்களாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களை சந்திக்காத மோடி. பெரிய பணக்காரர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் அழைத்துப் பேசுகிறார். ஏன் விவசாயிகளை அழைத்து பேசவில்லை.

    நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதைத்தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #MKStalin
    Next Story
    ×