என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டி.கல்லுப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் தந்தைக்கு அடி-உதை
பேரையூர்:
மதுரையை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னிவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 50). இவரது மகன் மணிகண்டன், அதே பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் மகள் ஜோதியை காதல் திருமணம் செய்தார்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பழனிகுமாரின் அண்ணன் செல்லையா கேட்கச் சென்றார். மணிகண்டனின் தந்தை விஜயனை சந்தித்து அவர் இதுபற்றி கேட்டார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் செல்லையா ஆத்திரமடைந்து கம்பால் தாக்கியதாக டி.கல்லுப்பட்டி போலீசில் விஜயன் புகார் செய்தார். மேலும் அவர் காயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்குட் பட்ட டி.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ஞானகுரு. இவரை இடத்தகராறு காரணமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த இன்னாட்சி மகன்கள் முத்துக்குமார் (25), ராஜன், சார்லஸ், சதீஷ்குமார் ஆகியோர் கல்லால் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ஞானகுரு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்