search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியா?- வைகோ பேட்டி
    X

    பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியா?- வைகோ பேட்டி

    பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடுவேனா என்பது குறித்து உயர் நிலை குழு கூட்டம் முடிவு செய்யும் என்று வைகோ கூறியுள்ளார். #Vaiko #parliamentelection

    பீளமேடு:

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    சமூக ஆர்வலர் முகிலன் உயிருக்கு ஆபத்து உள்ளது. அரசு இந்த பிரச்சினையை மெத்தனமாக கையாளுவது கவலைக்குரியதாக இருக்கிறது.

    அவர் குறித்த எந்த தகவல்களும் இதுவரை இல்லை என்பதால் எனக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.முகிலன் மகன் கார்வேந்தன் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தந்தை காணாமல் போன விவகாரம் பற்றி புகார் மனு அளித்துள்ளார். இருந்தபோதும் அரசு மற்றும் காவல் துறை விசாரணை சரி வர இல்லை. அவர் உயிர் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும். திருப்பூர் வந்த போது அவருக்கு கருப்பு கொடி காட்டிய போது என் மீது ஒரு பெண்ணை ஏவி செருப்பு வீச செய்தனர். இருந்த போதும் அவரை பத்திரமாக அனுப்பி வைத்தோம்.

    வன்முறையில் எங்களுக்கு உடன்பாடில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மேகதாது அணை, நியூட்ரினோ திட்டம், முல்லை பெரியார் அணை, ஸ்டெர்லைட் உட்பட அனைத்து வி‌ஷயங்களிலும் தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது.

    வேளாண் மண்டலத்தைக் அழிக்க பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருவது. உயர் மின் கோபுரம் திட்டங்கள் ,நியூட்ரினோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் தமிழகத்தில் திணிக்க முயலும் மோடி அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு காட்டப்படும். எத்தியோப்பியா போல தமிழக டெல்டா மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.


    தி.மு.க.வுடன் நடத்தும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை திருப்தி கரமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. நான் திருச்சியில் போட்டியிடுவேனா என்பது குறித்து உயர் நிலை குழு கூட்டம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #parliamentelection

    Next Story
    ×