search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுராந்தகம் அருகே பஸ் மீது கார் மோதல்- ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
    X

    மதுராந்தகம் அருகே பஸ் மீது கார் மோதல்- ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #MaduranthakamAccident
    மதுராந்தகம்:

    மன்னார்குடியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 50). சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது உறவினர் வீட்டு திருமணம் மன்னார்குடியில் நடந்தது.

    இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக பத்மாவதி, சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தார்.

    அவரை அழைத்து செல்வதற்காக மன்னார்குடியில் இருந்து பத்மாவதியின் மகன் மணிகண்டன் (25), மருமகன் வேல்முருகன் (35), பேத்தி திரிஷா (12) ஆகியோர் காரில் வந்தனர்.

    விமான நிலையத்துக்கு வந்து பத்மாவதியை 3 பேரும் காரில் ஏற்றிக் கொண்டு மன்னார்குடி நோக்கி சென்றனர். காரை வேல் முருகன் ஓட்டினார். மதுராந்தகம் அடுத்த திருநாகலூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது வேல்முருகன் திடீரென்று கண் அயர்ந்தார்.

    அப்போது கார் தறிகெட்டு ஓடத் தொடங்கியது. பின்னர் அந்த கார் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு சாலையின் மறுபுறம் ஓடியது. அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது கார் வேகமாக மோதியது.

    இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த பத்மாவதி, மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். திரிஷா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய திரிஷாவை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #MaduranthakamAccident
    Next Story
    ×