search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குவைத்தில் இருந்து வந்த சென்னை விமானத்தில் 1½ கிலோ தங்கம் கடத்தல்
    X

    குவைத்தில் இருந்து வந்த சென்னை விமானத்தில் 1½ கிலோ தங்கம் கடத்தல்

    குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 1½ கிலோ தங்கத்தை கடத்திய பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    குவைத்தில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னைக்கு விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் வந்த 2 பெண்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை பெண் அதிகாரிகள் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் இருவரும் உள்ளாடையில் 5 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த தங்க கட்டிகள் 1½ கிலோ எடை கொண்டவை. அதன் மதிப்பு ரூ.53½ லட்சமாகும். இதுதொடர்பாக 2 பெண்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். #ChennaiAirport
    Next Story
    ×