search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது- ஓம்சக்தி சேகர் பேச்சு
    X

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது- ஓம்சக்தி சேகர் பேச்சு

    தி.மு.க.வுக்கு பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட எந்த தொகுதிகளிலும் டெபாசிட் கூட கிடைக்காது என்று ஓம்சக்தி சேகர் பேசினார். #dmk #parliamentelection


    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்.தன் வாழ்க்கை முழுவதும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக வாழ்ந்தார். சத்துணவு திட்டத்தினை அறிமுகப்படுத்தி இந்த உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அதன் பின்னர் அம்மா இந்த இயக்கத்தை தன் கண் இமை போல காத்து வந்தார். இப்போது கழக ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதைக்குரிய ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தி.மு.க. வழக்கு போட்டு தடுக்க முயன்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி சாதனை செய்துள்ளார்கள். பொங்கல் பரிசுடன் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 வழங்கி சாதனை செய்த ஓரே அரசு அ.தி.மு.க அரசு ஆகும்.

    ஆனால் புதுவை மாநில அரசு மக்களுக்கு எந்த திட்டமும் நிறைவேற்ற வில்லை. புதுவை மாநிலத்தில் பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு மாநில அந்தஸ்து பெற எந்த முயற்சியும் எடுக்காமல் இப்போது அரசியல் லாபம் கருதி மத்தியில் ஆட்சி அமைத்த 2 மாதங்களில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பொய்பிரசாரம் செய்து வருகின்றனர்.

    புதுவையில் உள்ள தொழிற்சாலைகளை வீட்டுக்கு அனுப்பி விட்டு இப்போது தொழிற் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் கூறுவது ஏமாற்று வேலை.

    தி.மு.க.வுக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட எந்த தொகுதிகளிலும் டெபாசிட் கூட கிடைக்காது கழக கூட்டணி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு ஓம்சக்தி சேகர் பேசினார்.  #dmk #parliamentelection

    Next Story
    ×