என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை அருகே விளாச்சேரியில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை - 2 பேர் கைது
பேரையூர்:
மதுரை அருகே உள்ள விளாச்சேரி ஆதிசிவன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காந்திமதி. இவர்களது மகன் கவுதமன் (வயது 30). இவருக்கும், மொட்டமலை கலைஞர் நகரைச் சேர்ந்த சேதுபிரசாத் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கவுதமன் நேற்று மொட்டைமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அங்கு மது அருந்திவிட்டு வெளியே வந்தபோது சேதுபிரசாத், அவரது நண்பர் கரண்ராஜா (19) ஆகியோர் கவுதமனிடம் மீண்டும் தகராறு செய்தனர்.
இதில் வாக்குவாதம் முற்றவே போதையில் இருந்த கவுதமனை இருவரும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த கவுதமன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுதமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சேது பிரசாத்தையும், கரண் ராஜாையும் கைது செய்தனர்.
சேதுபிரசாத்தின் அண்ணன் 2 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கவுதமன் தான் காரணம் எனக்கருதி பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் சேதுபிரசாத், தனது நண்பருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்