search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டுகிறார் - கேபி முனுசாமி பேட்டி
    X

    கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டுகிறார் - கேபி முனுசாமி பேட்டி

    கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டி வருகிறார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தெரிவித்தார். #Kodanad #TNGovernor #KPMunusamy #MKStalin
    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்நிலையில், கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் எம்பிக்கள் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் கொடநாடு வீடியோ தொடர்பான விஷயங்களை விவரித்தனர்.

    அதன்பின்னர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கினோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் எங்களுக்கு சாதகமான பதிலை கூறினார். 

    கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம்சாட்டி வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என தெரிந்தவுடன் புகார் அளித்துள்ளார் என தெரிவித்தார். #Kodanad #TNGovernor #KPMunusamy #MKStalin
    Next Story
    ×