search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்- கமல்ஹாசன்
    X

    மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்- கமல்ஹாசன்

    ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது.  கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக அமீர் கலந்துகொண்டார்.



    இக்கூட்டத்திற்கு பின்னர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம். தமிழகத்தின் மரபணுவை மாற்ற துடிக்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர்.

    40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரச்னைகளை முன்வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    Next Story
    ×