search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் கூடுதல் வட்டி கேட்டு பிரச்சினை: வாலிபர் தற்கொலை முயற்சி
    X

    விருதுநகரில் கூடுதல் வட்டி கேட்டு பிரச்சினை: வாலிபர் தற்கொலை முயற்சி

    கூடுதல் வட்டி கேட்டு ஏற்பட்ட பிரச்சினையில் வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மேலும் மனைவி மீது தாக்குதல் நடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் முத்தாள் நகரைச்சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கோதையம்மாள் (வயது 32).

    இவர் கடந்த ஜூன் மாதம் பாண்டியன் நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (35) என்பவரிடம் ரூ.45 ஆயிரம் கடன் வாங்கினார். ரூ.25 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்திய நிலையில் மீதமுள்ள பணத்தை செலுத்த காலதாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் உமா மகேஸ்வரி அசல், வட்டியைச் சேர்த்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்டு கோதையம்மாள் அதிர்ச்சியடைந்தார்.

    மேலும் பணத்தை கேட்டு உமா மகேஸ்வரி அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியடைந்த கோதையம்மாளின் கணவர் நாகராஜ் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்ட அக்கம், பக்கத்தினர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனாலும் உமா மகேஸ்வரி தொடர்ந்து பணத்தை கேட்டு வந்துள்ளார்.

    சம்பவத்தன்று உமா மகேஸ்வரி, அவரது தாயார் பூமணி ஆகியோர் வீட்டுக்கு வந்து தன்னை தாக்கியதாக கோதையம்மாள் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா மகேஸ்வரி, பூமணியை கைது செய்தனர்.

    Next Story
    ×