search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை-திருமங்கலத்தில் கல்லூரி மாணவி-மாணவர்கள் 6 பேர் திடீர் மாயம்
    X

    மதுரை-திருமங்கலத்தில் கல்லூரி மாணவி-மாணவர்கள் 6 பேர் திடீர் மாயம்

    மதுரை மற்றும் திருமங்கலத்தில் கல்லூரி மாணவி-மாணவர்கள் 6 பேர் திடீரென மாயமானார்கள். இதில் 4 பேர் சென்னையில் மீட்கப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள பரவை விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் நந்தினி (வயது 20). மதுரையில் உள்ள பெண்கள் கல்லூரியில் நந்தினி இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை.

    இது குறித்து அவரது தாயார் காளீஸ்வரி சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் கக்கன் காலனியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் ஆகாஷ் (14), அதே பகுதியைச் சேர்ந்த மீரான் மைதீன் மகன் முகம்மது ஆரீப் (14), நாகூர்கனி மகன் முகம்மது ஆசிக் (13) ஆகியோர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

    இவர்கள் 3 பேரும் பள்ளிக்குச் சென்று இரவு வரை வீடு திரும்பவில்லை. இதே போல திருமங்கலம் ஜவகர் நகரைச் சேர்ந்த மணி மகன் மணி கூடலிங்கம் (13) பசுமலை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரும் வீடு திரும்பவில்லை.

    அவர்கள் 4 பேரையும் பல்வேறு இடங்களில் தேடினர். எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவர் களின் பெற்றோர்கள் திரு மங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 மாணவர்களை தீவிரமாக தேடி வந்தார்.

    மேலூர் கருத்த புளியம்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது மகன் யோகேஸ்வரன் (15) மதுரையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    விடுதியில் தங்கி படித்து வந்த யோகேஸ்வரன் தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்குச் சென்றார். மீண்டும் பள்ளிக்கு வரவில்லை.

    பெற்றோரிடம் விசாரித்த போது கடந்த 7-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்று விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சென்னை அண்ணா சதுக்கம் பகுதியில் 4 சிறுவர்கள் சுற்றித்திரிவதை போலீசார் பார்த்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் 4 பேரும் திருமங்கலத்தில் மாயமானவர்கள் என்பது தெரியவந்தது.

    இது குறித்து திருமங்கலம் போலீ சாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. மாணவர்களை அழைத்து வருவதற்காக போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

    Next Story
    ×