search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தலை குப்புற கவிழ்ந்து டிரைவர் பலி
    X

    ஒட்டன்சத்திரம் அருகே வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தலை குப்புற கவிழ்ந்து டிரைவர் பலி

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தலை குப்புற கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

    வடமதுரை:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45). லாரி டிரைவர். இவர் சென்னையில் இருந்து வெங்காய மூடைகளை ஏற்றிக் கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். லாரியில் கன்னிவாடியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் கிளீனராக இருந்தார்.

    இன்று காலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேல்வார்கோட்டை அருகே லாரி வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

    இதில் ராஜா சம்பவ இடத்திலேயே லாரிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாய மடைந்த மணிகண்டன் திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×