என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரம் அருகே வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தலை குப்புற கவிழ்ந்து டிரைவர் பலி
Byமாலை மலர்21 Nov 2018 10:59 AM GMT (Updated: 21 Nov 2018 10:59 AM GMT)
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தலை குப்புற கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
வடமதுரை:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45). லாரி டிரைவர். இவர் சென்னையில் இருந்து வெங்காய மூடைகளை ஏற்றிக் கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். லாரியில் கன்னிவாடியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் கிளீனராக இருந்தார்.
இன்று காலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேல்வார்கோட்டை அருகே லாரி வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் ராஜா சம்பவ இடத்திலேயே லாரிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாய மடைந்த மணிகண்டன் திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X