என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முசிறியில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திகுத்து
Byமாலை மலர்1 Nov 2018 2:52 PM GMT (Updated: 1 Nov 2018 2:52 PM GMT)
முசிறியில் முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி விட்டு 2 பேர் தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி குடிகாரதெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 25). இவருக்கும் அதே பகுதி ஏவூர் மேலதெருவை சேர்ந்த முருகானந்தம் மற்றும் தாஸ் (25) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முசிறி அய்யம்பாளையம் கடைவீதியில் ஆனஸ்ட்ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகானந்தம் மற்றும் தாஸ் ஆகிய 2 பேரும் ஆனஸ்ட்ராஜிடம் தகராறு செய்தனர். பின்னர் கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் முசிறி போலீசார் விரைந்து சென்று ஆனஸ்ட்ராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முசிறி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X