search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
    X

    மாமல்லபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    மாமல்லபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது28) சென்னையில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவர் ஆயுதபூஜை கொண்டாட மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்றார். பண்டிகை விடுமுறை முடிந்து அவர் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். மாமல்லபுரம் பைபாஸ் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புச் சுவர் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரன் உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×