search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
    X

    பல்லடம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

    பல்லடம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    மதுரையில் இருந்து கோவைக்கு இன்று புறப்பட்டு அதிகாலை ஒரு அரசு பஸ் வந்தது. காலை 7.30 மணி அளவில் பல்லடம் அருகே வந்த போது சாலையை கடந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் மீது பஸ் மோதியது. இதில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவலறிந்து பல்லடம் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×