search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும் - அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும் - அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    பூதலூரில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் என்.வி.கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    பூதலூர்:

    பூதலூரில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் என்.வி.கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆண்டு அனைத்து விவசாயிகளுக்கும்பாரபட்சமின்றி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்கடன் வழங்க வேண்டும்.

    கூட்டுறவு வங்கிகளில்விவசாயிகள் வைத்துள்ள நகைகளை ஏலம் விடக் கூடாது. விவசாய உரங்களின் விலை உயர்வைரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன்.டாக்டர் அம்பேத்கார்,தந்தை பெரியார் சமுக நீதி பாசறை பொதுச்செயலாளர் அருண் மாசிலாமணி, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பு. தி.மு.க.வின் ஆல்பர்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், தமிழ்தேசிய பேரியக்க ஒன்றிய செயலாளர் தென்னவன். பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்க செயலாளர் உதயகுமார் மற்றம் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார காங்கிரஸ் தலைவர் அறிவழகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×