search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Budalur"

    பூதலூர் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு சிவில்பிரிவில் படித்து வரும் மாணவர் விக்னேசுவரன் (வயது21). விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    விக்னேஸ்வரன் செங்கிப்பட்டி கடைவீதியில் உள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக தன் நண்பர்கள் பெரம்பலூர் பழமலை(20) சேலம் அஜித்குமார்(20) ஆகியோருடன் செங்கிப்பட்டி கடைவீதி நோக்கி வந்துள்ளார். செங்கிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்து மின் கம்பங்களில் மோதியது.

    இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் விக்னேசுவரன் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த பழமலை திருச்சி தனியார் மருத்துவமனையிலும், அஜித்குமார் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பூதலூரில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் என்.வி.கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    பூதலூர்:

    பூதலூரில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் என்.வி.கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆண்டு அனைத்து விவசாயிகளுக்கும்பாரபட்சமின்றி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்கடன் வழங்க வேண்டும்.

    கூட்டுறவு வங்கிகளில்விவசாயிகள் வைத்துள்ள நகைகளை ஏலம் விடக் கூடாது. விவசாய உரங்களின் விலை உயர்வைரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன்.டாக்டர் அம்பேத்கார்,தந்தை பெரியார் சமுக நீதி பாசறை பொதுச்செயலாளர் அருண் மாசிலாமணி, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பு. தி.மு.க.வின் ஆல்பர்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், தமிழ்தேசிய பேரியக்க ஒன்றிய செயலாளர் தென்னவன். பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்க செயலாளர் உதயகுமார் மற்றம் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார காங்கிரஸ் தலைவர் அறிவழகன் நன்றி கூறினார்.

    ×