search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டியிட பா.ஜனதா விருப்பம் - தமிழிசை சவுந்தரராஜன்
    X

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டியிட பா.ஜனதா விருப்பம் - தமிழிசை சவுந்தரராஜன்

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் போட்டியிட பா.ஜனதா விரும்புவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #Thiruparankundramconstituency

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நாளை (23-ந் தேதி) நடக்க உள்ளது. இதில் பங்கேற்க மதுரை வந்த பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டாலின் பாசி‌ஷ பா.ஜ.க ஒழிக என்று கூறுகிறார். அவரது கட்சியினர் கள்ளத் துப்பாக்கி, பிரியானி கடையில் பிரச்சினை, அழகு நிலையம், பேன்சி கடை போன்ற இடங்களில் பிரச்சினை அடாவடி செய்து வருகிறார்கள்.

    பண மதிப்பீடு இந்தியாவை செம்மைப்படுத்தி இருக்கிறது. தி.மு.க.வால் தமிழகத்தில் அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. பா.ஜ.க.வை என்ன செய்ய முடியும்.


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர் இடைத்தேர்தல் வந்தாலும், பா.ஜ.க. போட்டியிட தான் விருப்பம்.

    தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், படை பலம் இல்லாமல் தேர்தல் நடந்தால் நல்லது. நேர்மையான தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். பா.ஜ.க. அரசு பெட்ரோல் விலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது.

    ஊழல் புகாரில் முதல்வர், துணை முதல்வர், மந்திரிகள் யாராக இருந்தாலும் வழக்குகளை சந்திக்கட்டும். இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டதில் தி.மு.க. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடி உள்ளது.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #Thiruparankundramconstituency

    Next Story
    ×