search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதிக்கு இடம் கொடுத்தது அதிமுக போட்ட பிச்சை - சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் கடம்பூர் ராஜு
    X

    கருணாநிதிக்கு இடம் கொடுத்தது அதிமுக போட்ட பிச்சை - சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் கடம்பூர் ராஜு

    தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றிய அமைச்சர் கடம்பூர் ராஜு கருணாநிதிக்க்கு அண்ணா சமாதி அருகே இடம் கொடுத்தது அதிமுக அளித்த பிச்சை என சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். #Karunanidhi #MinisterKadamburRaju #DMK #ADMK
    தூத்துக்குடி:

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து இருந்தது. அதன்பின் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கு இடம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கி இருந்தது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக கட்சி தொண்டர்களிடையே பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.



    மேலும், 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோதே இறந்திருந்தால், அரசு மரியாதை கிடைத்து இருக்கும் எனவும், ஆனால் தற்போது அரசு மரியாதை கிடைத்து இருக்கிறது என்றால் அது அதிமுக போட்ட பிச்சை என தெரிவித்துள்ளார்.

    மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கலாம் என்றும், சரி எங்கேயாவது வைத்துவிட்டு போகட்டும் என்றுதான் தாம் கையெழுத்து போட்டதாகவும், பிறகு முதல்வரும் கையெழுத்து போட்டதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.

    அமைச்சர் கடம்பூர் ராஜுவின் இந்த கருத்து திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. #Karunanidhi #MinisterKadamburRaju #DMK #ADMK
    Next Story
    ×