search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தனி கவனம்- போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவு
    X

    பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தனி கவனம்- போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவு

    பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கூடுதல் ஏ.டி.எஸ்.பி.க்கள் டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறை அல்லாத இதர பிரிவுகளை சேர்ந்த சமூக நலத்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு மருத்துவமனை அதிகாரிகள். சிறைத்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும், சாலை விபத்துக்கள் நடைபெறாமல் எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும், அறிவுரை வழங்கப்பட்டது. பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

    காணாமல் போன சிறுவர், சிறுமியர்களை விரைந்து கண்டுபிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள பிடி கட்டளைகளை நிறைவேற்ற தணிகுழு அமைக்க வேண்டும். பற்றியும், ஒவ்வொரு கிராமத் திலும் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை உரிய மரியாதையுடன் வரவேற்று அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு சூப்பிரண்டு பர்வேஷ்குமார் உத்தரவிட்டார். #tamilnews
    Next Story
    ×