search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலகிருஷ்ணன்
    X
    பாலகிருஷ்ணன்

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க புதிய வியூகம் அமைக்கப்படும்- பாலகிருஷ்ணன்

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மதவாத பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பதற்கு எதிராக புதிய வியூகங்களை அமைக்கப்படும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ParliamentElection #BJP
    சிதம்பரம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. தனது ஆதரவு மாநில கட்சிகள் மூலம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி நாடு முழுவதுமான பெற்ற வெற்றி இல்லை. மக்கள் மன்றத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்து விட்டது. இந்தியா முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட தோல்வியே இதற்கு சான்று.

    கருப்பு பணம் ஓழிப்பு, விலைவாசி உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் பற்றி எதிர்கட்சிகளின் கேள்விக்கு பிரதமரின் பதில் ஏற்று கொள்ளகூடியதாக இல்லை. மேலும் கல்வி, விவசாயிகளுக்கான இரட்டிப்பு வருமானம் 2022-ல் வரும் என்பது ஏற்று கொள்ள முடியாது. 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கும் தற்போது பிரதமரின் பதிலும் முரண்பாடாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மதவாத பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பதற்கு எதிராக வியூகங்களை அமைக்கும் வகையில் செப்டம்பர் மாதம் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தப்படும்.

    தற்போது ஏரிகள் போர்கால அடிப்படையில் 20 நாட்களில் தூர்வாரப்படும் என்கிறார்கள். வறட்சி காலங்களில் எதுவும் செய்யாமல் தற்போது ஏரிகள் தூர்வாரப்படும் என்ற அறிவிப்பு மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் உள்ளது. மேட்டூர் அணையில் நீர்திறந்து விடப்பட்ட பிறகு ஏன் தூர்வார வேண்டும். நீர்நிலைகளில் தண்ணீர் வரும் சூழ்நிலையில் அவசரகதியில் தூர்வாருவதால் எந்த பயனும் இல்லை. இது ஊழலுக்கு வழிவகுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #BJP

    Next Story
    ×