என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்தலூர் அருகே 200 அடி கிடுகிடு பள்ளத்தில் கார் உருண்டு விழுந்து விபத்து - 3 பேர் படுகாயம்
Byமாலை மலர்2 July 2018 4:59 PM GMT (Updated: 2 July 2018 4:59 PM GMT)
பந்தலூர் அருகே 200 அடி கிடுகிடு பள்ளத்தில் கார் உருண்டு விழுந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பந்தலூர்:
பந்தலூர் அருகே 200 அடி கிடுகிடு பள்ளத்தில் கார் உருண்டு விழுந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கேரளமாநிலம் சுல்தான் பத்தேரியை சேர்ந்தவர் அசைனார் (வயது 45). இவரது மகன் சாசுலான் (17), அசைனார் மகளின் பேரக்குழந்தை நிஷான் (5). சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் காரில் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்தனர். பின்னர் அதே காரில் திரும்பினர். கார் பந்தலூர் அருகே நெலக்கோட்டை மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது திடீரென கார் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரத்தில் உள்ள 200 அடி கிடு கிடு பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது.
காருக்குள் இருந்த அசைனார் (வயது 45). சாசுலான் (17), நிஷான் (5) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நெலாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்புபடையினரும் அங்கு விரைந்துவந்து, காருக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு, உடனே அவர்களை கேரளாவில் உள்ள மேப்பாரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர் அருகே 200 அடி கிடுகிடு பள்ளத்தில் கார் உருண்டு விழுந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கேரளமாநிலம் சுல்தான் பத்தேரியை சேர்ந்தவர் அசைனார் (வயது 45). இவரது மகன் சாசுலான் (17), அசைனார் மகளின் பேரக்குழந்தை நிஷான் (5). சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் காரில் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்தனர். பின்னர் அதே காரில் திரும்பினர். கார் பந்தலூர் அருகே நெலக்கோட்டை மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது திடீரென கார் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரத்தில் உள்ள 200 அடி கிடு கிடு பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது.
காருக்குள் இருந்த அசைனார் (வயது 45). சாசுலான் (17), நிஷான் (5) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நெலாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்புபடையினரும் அங்கு விரைந்துவந்து, காருக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு, உடனே அவர்களை கேரளாவில் உள்ள மேப்பாரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X