என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் பாத்திரங்களை விற்று மோசடி- பெண் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்13 Jun 2018 11:01 AM GMT (Updated: 13 Jun 2018 11:01 AM GMT)
விருதுநகரில் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள பாத்திரங்களை விற்று மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் கத்தாளம் பட்டி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 48). இவர் சமையல் பாத்திரங்களை வாடைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் விருதுநகர் ஆணைக்குழாய் தெருவை சேர்ந்த பேச்சியம்மாள் (60), முத்துராமன்பட்டியை சேர்ந்த சக்திவேல் (52) ஆகியோர் நேற்று மதுரையில் நடக்கும் திருமண விழாவுக்கு சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பி மாரியப்பன் ரூ. 4½ லட்சம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்களை கொடுத்து அனுப்பினார். நேற்று இரவு அவர்கள் பாத்திரங்களை திருப்பி தரவில்லை. பல முறை அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
இந்த நிலையில் சமையல் பாத்திரங்களை ஏற்றி சென்ற மினிலாரி டிரைவரிடம் மாரியப்பன் விசாரித்துள்ளார். அப்போது அவர், பேச்சியம்மாள், சக்திவேல் ஆகியோர் மதுரை விரகனூரில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் பாத்திரங்களை இறக்கியதாக கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பன், இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை விரகனூருக்கு சென்று பாத்திரக்கடையில் விசாரணை நடத்தினர். அப்போது பாத்திரங்களை 2 பேரும் விற்றதாக தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பேச்சியம்மாள், சக்திவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். #Tamilnews
விருதுநகர் கத்தாளம் பட்டி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 48). இவர் சமையல் பாத்திரங்களை வாடைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் விருதுநகர் ஆணைக்குழாய் தெருவை சேர்ந்த பேச்சியம்மாள் (60), முத்துராமன்பட்டியை சேர்ந்த சக்திவேல் (52) ஆகியோர் நேற்று மதுரையில் நடக்கும் திருமண விழாவுக்கு சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பி மாரியப்பன் ரூ. 4½ லட்சம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்களை கொடுத்து அனுப்பினார். நேற்று இரவு அவர்கள் பாத்திரங்களை திருப்பி தரவில்லை. பல முறை அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
இந்த நிலையில் சமையல் பாத்திரங்களை ஏற்றி சென்ற மினிலாரி டிரைவரிடம் மாரியப்பன் விசாரித்துள்ளார். அப்போது அவர், பேச்சியம்மாள், சக்திவேல் ஆகியோர் மதுரை விரகனூரில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் பாத்திரங்களை இறக்கியதாக கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பன், இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை விரகனூருக்கு சென்று பாத்திரக்கடையில் விசாரணை நடத்தினர். அப்போது பாத்திரங்களை 2 பேரும் விற்றதாக தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பேச்சியம்மாள், சக்திவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X