search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் - ரெயில்வே பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
    X

    ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் - ரெயில்வே பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

    ஒப்பந்ததாரரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக பெற்ற வழக்கில் தெற்கு ரெயில்வேயில் முதுநிலை பொறியாளராக பணியாற்றிய தோட்டா சிவக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வேயில் முதுநிலை பொறியாளராக பணியாற்றியவர் தோட்டா சிவகுமார். கடந்த 2014-ம் ஆண்டு ஒப்பந்ததாரர் ஒருவரிடம் சில பில்களை மாற்றி தருவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து அவர் லஞ்சம் வாங்கும் போது அவரை சி.பி.ஐ அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.

    இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தோட்டா சிவாவை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். #TamilNews
    Next Story
    ×