என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மோடியின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் நடக்கிறது- தமிழிசை
பூந்தமல்லி:
போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை கவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நேர்மறையான அரசியல் நடத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து. எங்களது கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பத்திரிகை நிருபர்களை தவறாக சித்தரிப்பது தவறு. அதனை நீக்கச் சொல்லி வருகிறோம். யாரையும் சிறுமை படுத்தும் நோக்கம் எங்களுக்கு கிடையாது.
குறைவான மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகளை மூட வேண்டும் என்ற செய்தி கவலையை தருகிறது. அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவர்களை சேர்க்க வேண்டும்.
பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டம் நன்மை தரும் திட்டங்களாக உள்ளது. பிரதமரின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. அது எடுபடாமல் போய்விடும். சட்டரீதியாக நமக்கு காவிரி நீர் கிடைக்க போகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #tamilisai #pmmodi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்