என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை- தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது ஐகோர்ட்
Byமாலை மலர்18 April 2018 9:46 AM GMT (Updated: 18 April 2018 9:46 AM GMT)
மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ஊக்க மதிப்பெண் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை:
தொலைதூரம், எளிதில் அணுக முடியாத மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்கள் முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது 10 முதல் 30 சதவீதம் வரை ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதற்கான பகுதிகளை வகைப்படுத்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணையை எதிர்த்து டாக்டர்கள் சிலர் சென்னை உயர்நீமின்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, ‘இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என ஏற்கனவே மத்திய அரசு முடிவெடுத்துள்ளது’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மருத்துவ முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தொலைதூரப் பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதி என வகைப்படுத்தி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தொலைதூரம், எளிதில் அணுக முடியாத மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்கள் முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது 10 முதல் 30 சதவீதம் வரை ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதற்கான பகுதிகளை வகைப்படுத்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணையை எதிர்த்து டாக்டர்கள் சிலர் சென்னை உயர்நீமின்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, ‘இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என ஏற்கனவே மத்திய அரசு முடிவெடுத்துள்ளது’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மருத்துவ முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தொலைதூரப் பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதி என வகைப்படுத்தி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X