search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு
    X

    மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு

    மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கூடல்புதூர் கேஸ் குடோன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 29). சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள், பாண்டியராஜன் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர்.

    இதைப்பார்த்து சுதாரித்துக் கொண்ட அவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். ஆனாலும் 3 பேரும் விரட்டி வந்து பாண்டியராஜனை அரிவாளால் வெட்டினர். மேலும் அவர் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதில் காயமடைந்த பாண்டியராஜன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த 3 மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×