என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்தித்தார்
Byமாலை மலர்15 Jan 2018 1:32 AM GMT (Updated: 15 Jan 2018 2:14 AM GMT)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் நேற்று கட்சி தொண்டர்களை சந்தித்தார். #DMK #Karunanidhi #PongalFestival
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் நேற்று கட்சி தொண்டர்களை சந்தித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று கட்சித் தொண்டர்களை கோபாலபுரம் வீட்டில் சந்திப்பது வழக்கம். அன்றைய தினம் அனைவருக்கும் புத்தம் புது 10 ரூபாயை கருணாநிதி வழங்குவார். உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த பொங்கலுக்கு அவர் யாரையும் சந்திக்கவில்லை.
இந்த ஆண்டு கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் பொங்கல் தினத்தன்று கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுதொடர்பாக குடும்ப டாக்டர் கோபாலிடம் ஆலோசனை நடத்தியதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், பொங்கல் தினமான நேற்று கோபாலபுரம் வீட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்சி தொண்டர்களை சந்தித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோபாலபுரம் வீட்டை மலர்களால் அலங்கரித்தனர். மேலும், கரும்பு, வாழை மரம், தோரணங்களும் கட்டப்பட்டன. பொங்கல் திருநாளில் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஆசி வாங்குவதற்காக ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.
தனது இல்லத்தின் முன்பு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இந்த சந்திப்பின் போது டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். #DMK #Karunanidhi #PongalFestival #tamilnews
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் நேற்று கட்சி தொண்டர்களை சந்தித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று கட்சித் தொண்டர்களை கோபாலபுரம் வீட்டில் சந்திப்பது வழக்கம். அன்றைய தினம் அனைவருக்கும் புத்தம் புது 10 ரூபாயை கருணாநிதி வழங்குவார். உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த பொங்கலுக்கு அவர் யாரையும் சந்திக்கவில்லை.
இந்த ஆண்டு கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் பொங்கல் தினத்தன்று கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுதொடர்பாக குடும்ப டாக்டர் கோபாலிடம் ஆலோசனை நடத்தியதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், பொங்கல் தினமான நேற்று கோபாலபுரம் வீட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்சி தொண்டர்களை சந்தித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோபாலபுரம் வீட்டை மலர்களால் அலங்கரித்தனர். மேலும், கரும்பு, வாழை மரம், தோரணங்களும் கட்டப்பட்டன. பொங்கல் திருநாளில் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஆசி வாங்குவதற்காக ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.
தனது இல்லத்தின் முன்பு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இந்த சந்திப்பின் போது டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். #DMK #Karunanidhi #PongalFestival #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X