என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தபால் நிலைய கணக்கில் பணம் குறைந்ததால் பெண் அதிகாரி தற்கொலை - அதிர்ச்சியில் தாயும் பலி
Byமாலை மலர்21 Dec 2017 10:54 AM GMT (Updated: 21 Dec 2017 10:54 AM GMT)
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தபால் நிலைய கணக்கில் பணம் குறைந்ததால் பெண் அதிகாரி மனவேதனையில் எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதிர்ச்சியில் வளர்ப்பு தாய் உயிரிழந்தார்.
கரூர்:
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கள்ளை காலனியை சேர்ந்தவர்கள் பொன்ராஜ்-மாணிக்காயி தம்பதியினர். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவர்களுக்கு குழந்தை இல்லை.
எனவே முசிறி அருகே உள்ள மாங்கரைபேட்டையில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து மாரியம்மாள் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.
தற்போது 22 வயது ஆன மாரியம்மாள் என்ஜினீயரிங் படித்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வாழ்ந்த மாரியம்மாள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தோகைமலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் தபால் பை எடுக்கும் பணியாளராக பணிக்கு சேர்ந்தார்.
பின்னர் துறை ரீதியான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாரியம்மாள், பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கபட்டியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
மிகவும் பின்தங்கிய நிலையில் செயல்பட்டு வந்த தெலுங்கபட்டி அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக மாரியம்மாளுக்கு அஞ்சல் துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.52 ஆயிரம் ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தான் பணியாற்றி வரும் தெலுங்கபட்டி அஞ்சல் அலுவலகத்தில் ரூ.20 ஆயிரம் கணக்கில் குறைந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனது தந்தை மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி கணக்கில் குறைந்த ரூ.20 ஆயிரத்தை அஞ்சல் அலுவலகத்தில் திருப்பி செலுத்தி அதனை சரி செய்தார். ஆனாலும் சரியாக பணியாற்றியும் எப்படி கணக்கில் ரூ.20 ஆயிரம் குறைந்தது என்று தெரியாமல் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
கடும் விரக்தியில் இருந்த மாரியம்மாள் கடந்த 16-ந் தேதி தனது வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார். இதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த சில நிமிடங்களில் மாணிக்காயி (45) தான் தத்து எடுத்தாலும், தன்னுடைய மகளாக எண்ணி வளர்த்த செல்ல மகள் இறந்து விட்டாளே என்ற அதிர்ச்சியில் வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார்.
நேற்று மாலை திருச்சி அரசு மருத்துவமனையில் மாரியம்மாள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கள்ளை காலனிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மாரியம்மாள் உடலையும், மாணிக்காயி உடலையும் சேர்த்து எடுத்து சென்று ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உறவினர் மகாமுனி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கள்ளை காலனியை சேர்ந்தவர்கள் பொன்ராஜ்-மாணிக்காயி தம்பதியினர். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவர்களுக்கு குழந்தை இல்லை.
எனவே முசிறி அருகே உள்ள மாங்கரைபேட்டையில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து மாரியம்மாள் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.
தற்போது 22 வயது ஆன மாரியம்மாள் என்ஜினீயரிங் படித்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வாழ்ந்த மாரியம்மாள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தோகைமலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் தபால் பை எடுக்கும் பணியாளராக பணிக்கு சேர்ந்தார்.
பின்னர் துறை ரீதியான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாரியம்மாள், பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கபட்டியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
மிகவும் பின்தங்கிய நிலையில் செயல்பட்டு வந்த தெலுங்கபட்டி அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக மாரியம்மாளுக்கு அஞ்சல் துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.52 ஆயிரம் ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தான் பணியாற்றி வரும் தெலுங்கபட்டி அஞ்சல் அலுவலகத்தில் ரூ.20 ஆயிரம் கணக்கில் குறைந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனது தந்தை மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி கணக்கில் குறைந்த ரூ.20 ஆயிரத்தை அஞ்சல் அலுவலகத்தில் திருப்பி செலுத்தி அதனை சரி செய்தார். ஆனாலும் சரியாக பணியாற்றியும் எப்படி கணக்கில் ரூ.20 ஆயிரம் குறைந்தது என்று தெரியாமல் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
கடும் விரக்தியில் இருந்த மாரியம்மாள் கடந்த 16-ந் தேதி தனது வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார். இதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த சில நிமிடங்களில் மாணிக்காயி (45) தான் தத்து எடுத்தாலும், தன்னுடைய மகளாக எண்ணி வளர்த்த செல்ல மகள் இறந்து விட்டாளே என்ற அதிர்ச்சியில் வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார்.
நேற்று மாலை திருச்சி அரசு மருத்துவமனையில் மாரியம்மாள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கள்ளை காலனிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மாரியம்மாள் உடலையும், மாணிக்காயி உடலையும் சேர்த்து எடுத்து சென்று ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உறவினர் மகாமுனி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X