என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செஞ்சி அருகே 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்2 Dec 2017 5:33 AM GMT (Updated: 2 Dec 2017 5:33 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 2 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பழவலம் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும், 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் சமூக நல திட்ட அதிகாரிகள் லலிதா, விஜயா ஆகியோர் தலைமையில் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ மற்றும் அதிகாரிகள், திருமணம் நடக்க இருந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவருடைய பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அதிகாரிகள், 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, அந்த சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதேபோல் செஞ்சியை சேர்ந்த 26 வயதுடைய வாலிபருக்கும், 17 வயதுடைய சிறுமிக்கும் நடக்க இருந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பழவலம் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும், 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் சமூக நல திட்ட அதிகாரிகள் லலிதா, விஜயா ஆகியோர் தலைமையில் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ மற்றும் அதிகாரிகள், திருமணம் நடக்க இருந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவருடைய பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அதிகாரிகள், 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, அந்த சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதேபோல் செஞ்சியை சேர்ந்த 26 வயதுடைய வாலிபருக்கும், 17 வயதுடைய சிறுமிக்கும் நடக்க இருந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X