search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl marriage stop"

    அரக்கோணத்தில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள குருவராஜ பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 23 வாலிபருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.

    திருமணத்திற்காக நேற்று இரவு பெண் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து வேலூர் சமூகநலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வேலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் கல்யாணி மற்றும் அரக்கோணம் போலீசார் நேற்று இரவு திருமணம் நடக்க இருந்த மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டபடி குற்றம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்துவதாக உறுதியளித்தனர். இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் எழுதி வாங்கினர்.

    திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் இருவீட்டார் உறவினர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இன்று காலை 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சாந்தி நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகணேசமூர்த்தி(வயது25). விவசாயி. இவருக்கும் சேத்தியாத்தோப்பை அடுத்த வட்டாத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

    அதன் பேரில் இவர்களது திருமணம் சேத்தியாதோப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை நடக்க இருந்தது.

    இந்த நிலையில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து கடலூரில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் மற்றும் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அக்னீஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் திரிபுர சுந்தரி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவில் வட்டாத்தூரில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்த சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து விசாரித்தனர். 18 வயது நிரம்பும் வரை சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க கூடாது.

    அதை மீறி திருமணம் செய்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுமியின் பெற்றோரிடம் அதிகாரிகள் கூறினர்.

    இதை ஏற்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை உடனே நிறுத்துவதாக சிறுமியின் பெற்றோர் கூறினர்.

    இதை தொடர்ந்து அந்த 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டு கடலூரில் உள்ள குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    விருத்தாசலத்தில் திருமணத்துக்கு முதல் நாள் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் ராமசந்திரன்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு இன்று (புதன்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி நேற்று இரவு பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா, நல்லூர் தமிழரசி, ஊர்நல அலுவலர் விஜயா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று இரவு அந்த திருமண மண்டபத்துக்கு சென்றனர்.

    அவர்கள் சிறுமியின் பெற்றோரை அழைத்து, 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த திருமணத்தை நிறுத்தினர். இதையடுத்து அந்த சிறுமியை மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருமணத்துக்கு முதல் நாள் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆரணியில் 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    பெரியபாளையம்:

    ஆரணி எஸ்.பி. கோவில் தெருவைச் சேர்ந்த இரும்பு கடையில் பணியாற்றி வரும் 24 வயது வாலிபருக்கும், 16 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் நடப்பதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சங்கீதா,சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலக சமூகநலத்துறை அலுவலர் சரளா ஆகியோர் ஆரணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். சிறுமிக்கு திருமணம் செய்யக் கூடாது என்று கூறினர்.

    எனவே, பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் மட்டும் செய்து கொண்டனர். சிறுமிக்கு 18 வயது ஆன பின்பு திருமணம் செய்து கொள்வோம் என்று பெற்றோர்கள் உறுதி கூறினார்.

    மேலும், இது குறித்து போலீசாரும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கும் பெற்றோர்கள் எழுதிக் கொடுத்தனர். இதனால் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களும் பெற்றோர்களுக்கும், சிறுமி மற்றும் வாலிபர்களுக்கும் அறிவுரை வழங்கி விட்டு வந்தனர்.
    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இன்று பிளஸ்-2 மாணவியுடன் மாணவனுக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவனுக்கும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக காதல் ஏற்பட்டது.

    இந்த காதலுக்கு மாணவர் வீட்டில் எதிர்ப்பு ஏற்பட்டது. எனவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவி வீட்டுக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்று தங்கினார்.

    பின்னர் இன்று திருமணம் செய்வதற்காக நண்பர்கள் உதவியுடன் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு இடத்தில் தங்கி இருந்தனர்.

    இது குறித்த தகவல் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்களை தீவிரமாக தேடினர். மேலும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டது. அமலாராணி தலைமையிலான குழுவினர் அவர்களை தேடிய போது இருவரும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து மாணவியை திண்டுக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் பெற்றோரிடம் எடுத்து கூறி அவனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    அதிகாரிகள் வருவதையறிந்து, பிளஸ்-2 மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டு திருமண கோஷ்டி ஒட்டுமொத்தமாக மண்டபத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு, பெற்றோர் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். மாப்பிள்ளை பார்த்து, நிச்சயித்து இன்று காலை திருமணத்திற்கு தேதி குறித்தனர்.

    திருமண அழைப்பிதழை அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர். இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சுப முகூர்த்த நேரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடுகளை தடபுடலாக செய்தனர்.

    திருமணம் மதனஞ்சேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடக்கவிருந்தது. நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பிளஸ்-2 மாணவி மைனர் என்பதால், சைல்டு லைன் அமைப்பினருக்கு போனில் புகார் சென்றது.

    இதையடுத்து, சமூக பாதுகாப்பு நலத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து இன்று காலை மதனஞ்சேரி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது, மண்டபத்தில் ஒருவர் கூட இல்லை. தோரணங்கள் கட்டப்பட்டு மணவறை தயார் நிலையில் இருந்தது. தாலி கட்டும் நேரத்தில் அதிகாரிகள் வருவதையறிந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மணமக்கள் கோஷ்டி ஒட்டு மொத்தமாக தப்பி ஓடிவிட்டனர்.

    இதுதொடர்பாக, விசாரணை நடத்த திருமண கோஷ்டியை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாளை 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சோகுப்பம் கிராமத்தை சேர்ந்த பீமாராவ் என்பவருக்கும் காட்டுசித்தாமூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து செஞ்சி சைல்டுலைன் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தாசில்தார் ரங்கநாதன், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ, சமூகநல அலுவலர் பிரபாவதி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் பிரபு ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரை சந்தித்து, 18 வயது பூர்த்தியாகாமல் மகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என எச்சரித்தனர்.

    இதையடுத்து 18 வயது பூர்த்தியடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக அதிகாரிகளிடம் சிறுமியின் பெற்றோர் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    புதுவை அருகே வருகிற 29-ந்தேதி நடக்க இருந்த 17 வயது சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    சேதராப்பட்டு:

    புதுவை அருகே திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டை அடுத்துள்ளது நல்லாவூர் கிராமம். இது, தமிழக பகுதியை சேர்ந்ததாகும்.

    இந்த ஊரை சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் 29-ந் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    29-ந் தேதி திருவந்திபுரம் கோவிலில் திருமணமும், மறுநாள் திண்டிவனத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தனர்.

    இதுபற்றிய தகவல் திண்டிவனம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தெரிய வந்தது. அவர், நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

    அந்த பெண்ணுக்கு இன்னும் திருமண வயதான 18 வயது பூர்த்தியாகவில்லை என்று தெரிய வந்தது. எனவே, இதுபற்றி அவர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். வானூர் தாசில்தார் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அதில், அந்த பெண்ணுக்கு திருமண வயது நிரம்பவில்லை என்பது ஆதாரபூர்வமாக உறுதியானது.

    எனவே, பெண்ணின் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். திருமணத்தை நிறுத்த வேண்டும். அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    இதையடுத்து 29-ந் தேதி நடக்க இருந்த திருமணத்தை ரத்து செய்வதாக பெண்ணின் வீட்டார் எழுதி கொடுத்தனர். இதன் மூலம் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வவிநாயகம் (வயது 25).

    இவருக்கும் வடநெற்குணம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் முருக்கேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இது குறித்து திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்அடிப்படையில் திண்டிவனம் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி. ஏட்டு ராதா, சமூகநலத்துறை ஊர்நல அலுவலர் சரோஜா, விரிவாக்க அலுவலர்கள் ஜான்சிராணி, வசந்தகுமாரி ஆகியோர் அங்கு சென்றனர்.

    அவர்கள் மணமகன், மணமகளின் பெற்றோரை சந்தித்தனர். 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று கூறினர்.

    இதையும் மீறி திருமணம் செய்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து அந்த சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. #Tamilnews
    தோவாளையில் இன்று நடக்க இருந்த 17 வயது சிறுமியின் திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தத்தினர்.
    ஆரல்வாய்மொழி:

    தோவாளை பகுதியில் உள்ள ஒரு தம்பதியின் மகளுக்கு இன்று திருமணம் நடப்பதாக அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த திருமணத்தில் மணப்பெண்ணுக்கு 17 வயதே ஆவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் பாஸ்கர் தலைமையில் தொண்டர்கள் திருமண வீட்டிற்கு சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து திருமணத்தை நிறுத்தும்படி கூறினர்.

    இதற்கிடையே இந்த தகவல் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும், குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மெர்சிரமணி பாய், கிரிஜா மற்றும் சமூக நலத்துறை அதிகாரி பியூலா, குழந்தைகள் நல அலுவலர் பெமிலா ஆகியோர் தோவாளையில் உள்ள மணப்பெண்ணின் வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் மணப்பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

    இதில் மணப்பெண்ணுக்கு திருமண வயது ஆகவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவுறுத்தியதோடு, திருமணத்தை நிறுத்துமாறு கூறினர்.

    அதிகாரிகளின் அறிவுரையை ஏற்று திருமணத்தை நிறுத்துவதாக மணப்பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும் மணமகன் யார்? என்பது பற்றிய விபரத்தை கேட்டறிந்த அதிகாரிகள் அவரிடமும் விசாரணை நடத்த மணமகனின் வீட்டிற்கு சென்றனர்.

    இதற்காக போலீசார் மற்றும் அதிகாரிகள் மணப்பெண்ணின் பெற்றோரையும் அவர்களுடன் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ×