என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணியில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்5 Jan 2019 7:47 AM GMT (Updated: 5 Jan 2019 7:47 AM GMT)
ஆரணியில் 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பெரியபாளையம்:
ஆரணி எஸ்.பி. கோவில் தெருவைச் சேர்ந்த இரும்பு கடையில் பணியாற்றி வரும் 24 வயது வாலிபருக்கும், 16 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் நடப்பதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சங்கீதா,சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலக சமூகநலத்துறை அலுவலர் சரளா ஆகியோர் ஆரணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். சிறுமிக்கு திருமணம் செய்யக் கூடாது என்று கூறினர்.
எனவே, பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் மட்டும் செய்து கொண்டனர். சிறுமிக்கு 18 வயது ஆன பின்பு திருமணம் செய்து கொள்வோம் என்று பெற்றோர்கள் உறுதி கூறினார்.
மேலும், இது குறித்து போலீசாரும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கும் பெற்றோர்கள் எழுதிக் கொடுத்தனர். இதனால் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களும் பெற்றோர்களுக்கும், சிறுமி மற்றும் வாலிபர்களுக்கும் அறிவுரை வழங்கி விட்டு வந்தனர்.
ஆரணி எஸ்.பி. கோவில் தெருவைச் சேர்ந்த இரும்பு கடையில் பணியாற்றி வரும் 24 வயது வாலிபருக்கும், 16 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் நடப்பதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சங்கீதா,சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலக சமூகநலத்துறை அலுவலர் சரளா ஆகியோர் ஆரணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். சிறுமிக்கு திருமணம் செய்யக் கூடாது என்று கூறினர்.
எனவே, பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் மட்டும் செய்து கொண்டனர். சிறுமிக்கு 18 வயது ஆன பின்பு திருமணம் செய்து கொள்வோம் என்று பெற்றோர்கள் உறுதி கூறினார்.
மேலும், இது குறித்து போலீசாரும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கும் பெற்றோர்கள் எழுதிக் கொடுத்தனர். இதனால் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களும் பெற்றோர்களுக்கும், சிறுமி மற்றும் வாலிபர்களுக்கும் அறிவுரை வழங்கி விட்டு வந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X