search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
    X

    ஆரணியில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

    ஆரணியில் 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    பெரியபாளையம்:

    ஆரணி எஸ்.பி. கோவில் தெருவைச் சேர்ந்த இரும்பு கடையில் பணியாற்றி வரும் 24 வயது வாலிபருக்கும், 16 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் நடப்பதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சங்கீதா,சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலக சமூகநலத்துறை அலுவலர் சரளா ஆகியோர் ஆரணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். சிறுமிக்கு திருமணம் செய்யக் கூடாது என்று கூறினர்.

    எனவே, பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் மட்டும் செய்து கொண்டனர். சிறுமிக்கு 18 வயது ஆன பின்பு திருமணம் செய்து கொள்வோம் என்று பெற்றோர்கள் உறுதி கூறினார்.

    மேலும், இது குறித்து போலீசாரும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கும் பெற்றோர்கள் எழுதிக் கொடுத்தனர். இதனால் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களும் பெற்றோர்களுக்கும், சிறுமி மற்றும் வாலிபர்களுக்கும் அறிவுரை வழங்கி விட்டு வந்தனர்.
    Next Story
    ×