search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thovalai"

    தோவாளை அருகே தண்டவாளம் விரிசல் காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை மார்க்கமாக செல்லும் ரெயில்களும், நெல்லையில் இருந்து நாகர்கோவில் வரும் ரெயில்களும் தாமதமானது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.

    தோவாளை அருகே ரெயில் சென்றபோது பயங்கர சத்தம் கேட்டது. இந்த ரெயில் சென்ற சிறிது நேரத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலும் இந்த வழியாக சென்றது.

    அப்போதும் தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. இது வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் தோவாளையில் ரெயில் தண்டவாளத்தையொட்டி உள்ள தோட்டங்களில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    தோட்ட தொழிலாளர்கள் சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று தண்டவாளத்தை பார்த்தனர். அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டனர். உடனடியாக தொழிலாளிகள் இதுபற்றி தோவாளை மற்றும் நாகர்கோவில் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தோவாளை பகுதிக்கு விரைந்து வந்து தண்டவாளத்தை சோதனை செய்தனர். இதில் தண்டவாளம் விரிசல் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதனை சரி செய்யும் பணி நடந்தது.

    தண்டவாள விரிசல் காரணமாக நடு வழியில் நின்ற ரெயில்.

    ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலை சீரமைக்கும் பணியை தொடங்கும் முன்பு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு கோவை செல்லும் பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு விட்டது. அந்த ரெயிலை அதிகாரிகள் வழியிலேயே நிறுத்த நடவடிக்கை எடுத்தனர். இதனால் அந்த ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.

    இதுபோல விரிசல் ஏற்படும் முன்பு சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மும்பை ரெயில் தோவாளையை தாண்டி சென்றதால் அதிர்ஷ்டவசமாக அந்த ரெயில்களும் தப்பியது.

    தண்டவாளம் விரிசல் காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை மார்க்கமாக செல்லும் ரெயில்களும், நெல்லையில் இருந்து நாகர்கோவில் வரும் ரெயில்களும் தாமதமானது.

    பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வள்ளியூரில் நிறுத்தப்பட்டது. தண்டவாள சீரமைப்பு பணி முடிந்த பின்பு சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகு ரெயில்கள் நாகர்கோவில் வந்தது.
    தோவாளையில் இன்று நடக்க இருந்த 17 வயது சிறுமியின் திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தத்தினர்.
    ஆரல்வாய்மொழி:

    தோவாளை பகுதியில் உள்ள ஒரு தம்பதியின் மகளுக்கு இன்று திருமணம் நடப்பதாக அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த திருமணத்தில் மணப்பெண்ணுக்கு 17 வயதே ஆவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் பாஸ்கர் தலைமையில் தொண்டர்கள் திருமண வீட்டிற்கு சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து திருமணத்தை நிறுத்தும்படி கூறினர்.

    இதற்கிடையே இந்த தகவல் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும், குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மெர்சிரமணி பாய், கிரிஜா மற்றும் சமூக நலத்துறை அதிகாரி பியூலா, குழந்தைகள் நல அலுவலர் பெமிலா ஆகியோர் தோவாளையில் உள்ள மணப்பெண்ணின் வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் மணப்பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

    இதில் மணப்பெண்ணுக்கு திருமண வயது ஆகவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவுறுத்தியதோடு, திருமணத்தை நிறுத்துமாறு கூறினர்.

    அதிகாரிகளின் அறிவுரையை ஏற்று திருமணத்தை நிறுத்துவதாக மணப்பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும் மணமகன் யார்? என்பது பற்றிய விபரத்தை கேட்டறிந்த அதிகாரிகள் அவரிடமும் விசாரணை நடத்த மணமகனின் வீட்டிற்கு சென்றனர்.

    இதற்காக போலீசார் மற்றும் அதிகாரிகள் மணப்பெண்ணின் பெற்றோரையும் அவர்களுடன் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ×