என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் 2 பேர் பலி
Byமாலை மலர்18 Nov 2017 10:28 AM GMT (Updated: 18 Nov 2017 10:28 AM GMT)
உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் 2 பேர் பலியாகினர். இந்த விபத்துக்கள் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்த வர் சுப்பிரமணியன் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் தனது உறவினரான வடிவேலு என்பவருடன் உளுந்தூர்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள சாத்தனூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சுப்பிரமணியன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வடிவேல் பலத்த காயமடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த வடிவேலை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு சம்பவம்...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேபாக் கம் கிராமத்தை சேர்ந்த வர் ரங்கநாதன் (வயது 52), விவசாயி. இவர் நேற்று மாலை உளுந்தூர்பேட்டையிலிருந்து சொந்த ஊரான சேபாக்கத்துக்கு ரங்கநாதன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் உள்ள சிப்கோ தொழிற்சாலை அருகே ரங்கநாதன் மோட்டார் சைக்கிளில் வந்த போது அதே பகுதியில் சென்னையில் இருந்து மதுரைநோக்கி சென்ற தனியார் ஆம்னிபஸ் எதிர்பாராத விதமாக ரங்கநாதனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கள் குறித்து எடைக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்த வர் சுப்பிரமணியன் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் தனது உறவினரான வடிவேலு என்பவருடன் உளுந்தூர்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள சாத்தனூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சுப்பிரமணியன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வடிவேல் பலத்த காயமடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த வடிவேலை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு சம்பவம்...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேபாக் கம் கிராமத்தை சேர்ந்த வர் ரங்கநாதன் (வயது 52), விவசாயி. இவர் நேற்று மாலை உளுந்தூர்பேட்டையிலிருந்து சொந்த ஊரான சேபாக்கத்துக்கு ரங்கநாதன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் உள்ள சிப்கோ தொழிற்சாலை அருகே ரங்கநாதன் மோட்டார் சைக்கிளில் வந்த போது அதே பகுதியில் சென்னையில் இருந்து மதுரைநோக்கி சென்ற தனியார் ஆம்னிபஸ் எதிர்பாராத விதமாக ரங்கநாதனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கள் குறித்து எடைக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X