search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வலங்கைமான் அருகே தீக்காயம் அடைந்த பெண் பலி
    X

    வலங்கைமான் அருகே தீக்காயம் அடைந்த பெண் பலி

    வலங்கைமான் அருகே தீக்காயம் அடைந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வலங்கைமான்:

    வலங்கைமான் அருகே திருவோணமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 45). இவர் கடந்த 17-ந் தேதி வீட்டில் தீபாவளி பலகாரம் செய்த போது அடுப்பு தீ அவரது சேலையில் பிடித்தது. இதில் தீ பரவி உடல் முழுவதும் பிடித்ததால் அவர் காயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பததிரிக்கு மகேஸ்வரியை கொண்டு சென்றனர். அங்கு தொடர்ந்து 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×