search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலங்கைமான்"

    • வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் காவல் நிலையத்தில் நீண்ட காலமாக தேங்கி இருக்கக்கூடிய வழக்குகளை எல்லாம் தீர்வு காணும் விதமாக வலங்கைமானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெட்டி ஷன் மேளா நிகழ்வு நடைபெற்றது. இதில் நன்னிலம் டி.எஸ்.பி. தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன், சப் இன்ஸ்பெக்டர் வில்வநாதன், காமராஜ், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, தேங்கி நிற்கும் மனுக்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

    • மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள்,மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
    • இதற்கு ஒன்றிய செயலாளர் ராதா தலைமை தாங்கினார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஒன்றிய செயலாளர் ராதா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள்,மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்டி. வரியை மத்திய அரசு கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சண்முகம், இளங்கோவன், பாண்டியன், ஜெயராஜ் ,பாலகுரு, சந்திரோதயம், முரளி, சத்தியபாமா, சந்திரசேகரன், பாலையா, ஜெயந்தி, கலியபெருமாள், விஜய், நடராஜன், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார்.
    • ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சாத்தனூர் மேல தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் தமிழழகன் (வயது 27) கொத்தனார். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    மேலும் ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார். இதனால் அந்த பெண் 2 மாத கர்ப்பம் ஆன நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள தமிழழகன் மறுத்ததால் சினேகா நன்னிலம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்து ள்ளார்புகாரின் அடிப்படையில் தமிழழகனை போலீசார் கைது செய்தனர்.

    • ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார்.
    • ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சாத்தனூர் மேல தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் தமிழழகன் (வயது 27) கொத்தனார். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    மேலும் ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார். இதனால் அந்த பெண் 2 மாத கர்ப்பம் ஆன நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள தமிழழகன் மறுத்ததால் சினேகா நன்னிலம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்து ள்ளார்புகாரின் அடிப்படையில் தமிழழகனை போலீசார் கைது செய்தனர்.

    • மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.
    • 2022-23ஆம் ஆண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி நடந்து வருகிறது.

    முதல் நாள் பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி , வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இப்பயிற்சியில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை அரும்பு , மொட்டு , மலர் என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.

    இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் பார்வையிட்டார்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு 2022-23ஆம் ஆண்டில் இருந்து 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்க்குள் அனைத்து தொடக்கப் பள்ளி மாணவர்களும் படித்தல் , எழுதுதுதலில், கணக்கீடு செய்தல் ஆகிவற்றில் குறிப்பிட்ட திறனை அடைய கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.

    வலங்கைமானில் தீர்வாய கணக்கு முடித்தல் இறுதி நாள் நிகழ்ச்சியில் 48 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் பசலி 1431ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்கு முடித்தல் நடைபெற்று வருகிறது. 
     
    இறுதி நாள் நிகழ்ச்சியில் வலங்கைமான்   வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட  232 மனுக்களில் 48மனுக்களுக்கு உடன் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் ஆய்வு செய்து தீர்வு காணப்படும் என தாசில்தார் தெரிவித்தார். 

    இந்நிகழ்வில் வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்னன் முன்னிலை வகித்தார். தனி தாசில்தார் தேவகி, மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர்கள் சுகுமார், ராஜ்குமார், பழனிச்சாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×