என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவுண்டன்பாளையத்தில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்22 July 2017 4:48 PM GMT (Updated: 22 July 2017 4:48 PM GMT)
கவுண்டன்பாளையத்தில் அதிகாலை வேளையில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் செயினை பறித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பாளையத்தை அடுத்த குண்டு பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி தயாளம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் அங்குள்ள பால் பூத்துக்கு பால் வாங்க நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென தயாளம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர். தயாளம்மாள் திருடன்...திருடன் என அலறல் சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் செயினுடன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து விட்டனர். பறிபோன செயினின் மதிப்பு ரூ. 1 லட்சமாகும்.
இதுகுறித்து தயாளம்மாளின் மகன் அரிகிருஷ்ணன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X