search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம நபர்கள்"

    • உங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதால் நீங்கள் செல்போன் வீடியோ அழைப்பை ஆன் செய்து வைக்க வேண்டும்.
    • போலீசார் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவை சேர்ந்த 29 வயது பெண் வக்கீல் ஒருவரின் செல்போனுக்கு கடந்த 3-ந்தேதி அழைப்பு வந்தது. அதில் கூரியர் நிறுவனமான பெடெக்ஸ் நிறுவன ஊழியர் பேசுவதாகவும், உங்களது முகவரியிட்டு அனுப்பப்பட்ட பார்சலில் 140 கிராம் போதை பொருள் இருந்ததாகவும், உங்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக கூறி அழைப்பை வேறு ஒரு நபருக்கு திருப்பிவிட்டார்.

    இதையடுத்து மும்பை சி.பி.ஐ. அதிகாரி பேசுவதாக கூறி தனது பெயர் அபிஷேக் சவுகான் என அடையாளப்படுத்திக் கொண்டு அழைப்பில் இணைந்தார். அப்போது அவர் நீங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு உள்ளீர்கள். வழக்கில் இருந்து விடுவிக்க நாங்கள் சொல்வதை போல் செய்யுங்கள் என கூறி அந்த பெண்ணிடம் ஸ்கைப் பதிவிறக்கம் செய்து சாட்டிங் தொடங்கும்படி கட்டாயப்படுத்தினார். மேலும் உங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதால் நீங்கள் செல்போன் வீடியோ அழைப்பை ஆன் செய்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து கடந்த 3-ந் தேதி மதியம் 2.15 மணி முதல் 5-ந் தேதி அதிகாலை 1.15 மணி வரை சுமார் 35 மணி நேரத்தில் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் மர்ம நபர்கள் பயத்தைகாட்டினர். அப்போது அபிஷேக் சவுகான் அந்த பெண்ணிடம் போதைப்பொருள் சோதனைக்காக ஆடைகளை அகற்ற வேண்டும் என கூறினார். ஏறக்குறைய 36 மணி நேரம் நீடித்த ஒரே அழைப்பில், அந்த பெண் நிர்வாணமாக பதிவு செய்யப்பட்டு மிரட்டப்பட்டார். ரூ. 15 லட்சம் கொடுத்தால் உங்களை விட்டு விடுவதாக அபிஷேக் சவுகான் அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த பெண் ஒரு வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.10.7 லட்சத்தை அபிஷேக் சவுகான கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பின்னர் கிரெடிட் கார்டில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாயை 2 பரிவர்த்தனைகளாக அனுப்பி வைத்தார். இதனிடையே அபிஷேக் சவுகான் மேலும் ரூ.10 லட்சம் தருமாறு கேட்டார். இல்லையொன்றால் வீடியோவை வலைதளங்களில் வெளியிடப்படும். நீங்களும், உங்களுடைய குடும்ப உறுப்பினர்களும் கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்துபோன அந்த பெண் கடந்த 5-ந் தேதி அதிகாலை 1.15 மணியளவில் அழைப்பை துண்டித்துவிட்டு போலீசாரை அணுகினார்.

    இதையடுத்து போலீசார் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் கூரியர் மோசடி தொடர்பாக எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் வெளியிட வேண்டாம், உடனடியாக சைபர் காவல்துறையை தொடர்பு கொள்ளவும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளில், போலி கூரியர் மோசடி மூலம் சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு நபரை அழைத்து தங்கள் பெயரில் ஒரு கூரியரில் போதைப்பொருள் அல்லது பிற சட்டவிரோத பொருட்களுடன் பிடிபட்டதாக தெரிவிக்கிறார்கள். மோசடி செய்பவர்கள் கூரியர் நிறுவன ஊழியர்களாக காட்டிக்கொண்டு பணமோசடி அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி பெண்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர்.
    • நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த ஹந்தாராமை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 பெண்களும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக சாக்கு மூட்டைக்குள் திணிக்க முயன்றனர்.
    • குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்னகட்டங்குடி கிராமத்தில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை 8.30 மணியளவில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் வெளியே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்திருப்பதாக கூறிய இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவர் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளிடம் நைசாக பேச்சுக் கொடுத்தனர்.

    அப்போது ஆள்நடமாட்டம் குறைந்தபோது திடீரென அந்த மர்ம நபர்கள் 7, 3 வயதுடைய 2 குழந்தைகளையும் இறுக்கி பிடித்து கொண்டு, தங்கள் மறைத்து வைத்திருந்த மயக்க ஸ்பிரேயை எடுத்து குழந்தைகள் முகத்தில் அடித்தனர். இதனால் பீதியடைந்த குழந்தைகள் கூச்சலிட்டனர். பின்னர் 2 பெண்களும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக சாக்கு மூட்டைக்குள் திணிக்க முயன்றனர்.

    இதற்கிடையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். இதைப் பார்த்த மர்ம நபர்கள் இருவரும் குழந்தைகளை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தைகளை கடத்த வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பள்ளி முன்பு விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை சாக்கு மூட்டையில் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • முத்துராஜ் (வயது 27). இவரது தோட்டத்தில் தானாக வளர்ந்த 10 அடி உயரமும், 15 செ.மீட்டர் சுற்றளவு கொண்ட சந்தனம் மரம் வளர்ந்து வந்தது.
    • நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டினர்.

    சேலம்:

    சேலம் பெருமாள்மலை அடிவாரம் கழுக்கன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 27). இவரது தோட்டத்தில் தானாக வளர்ந்த 10 அடி உயரமும், 15 செ.மீட்டர் சுற்றளவு கொண்ட சந்தனம் மரம் வளர்ந்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டினர். இதனை பார்த்த முத்துராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சற்று தூரத்தில் வெட்டப்பட்ட சந்தன மரக்கட்டைகள் கிடந்தது. சந்தன மரம் நன்றாக முற்றினால் தான் வாசனை வீசும். ஆனால் வெட்டப்பட்ட மரத்தின் கட்டை முற்றாததால் அதிலிருந்து எந்த வாசனையும் வீசவில்லை. மர்ம நபர்கள் சுமார் 50 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை அங்கேயே வீசி விட்டு சென்று விட்டனர். இதனை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடையை பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.
    • ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒக்கக்குடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் வியாபாரம் முடிந்த பின்னர் டாஸ்மாக் கடை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர்.

    பின்னர் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.

    கல்லாப் பெட்டியில் இருந்த பணம், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பதறியடித்து கொண்டு சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    எவ்வளவு பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை போனது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    அதன் பிறகே கொள்ளை போனவற்றின் மதிப்பு முழு அளவில் தெரிய வரும் .இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் இந்த ரோட்டில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    • இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவையில் எல்.அண்ட். டி பைபாஸ் ரோடானது அவினாசி ரோட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் முக்கிய ரோடாக உள்ளது. சேலம்-கொச்சின் பைபாஸ் ரோட்டில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன.

    நள்ளிரவில் கேரளாவுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் லாரிகளும், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு சரக்குகளை ஏற்றி கொண்டு வரும் லாரிகளும் எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் வரிசையாக வந்து கொண்டிருக்கும். போத்தனூர், சுந்தராபுரம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் மக்களும் இருசக்கர வாகனத்தில் இந்த சாலை வழியாக தங்களது வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் சமீபகாலமாக நள்ளிரவில் பட்டாகத்தியுடன் சில மர்ம ஆசாமிகள் இந்தபகுதியில் வலம் வருகின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் தனியாக இருசக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளை வழி மறித்து, அவர்களை மிரட்டி ,தாக்கி வாகனத்தை மற்றும் உடைமைகளையும் பறித்து செல்கின்றனர்.

    இதன் காரணமாக பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் இந்த ரோட்டில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எல்.அண்ட்.டி பைபாஸ் ரோட்டில் வலது புறமும், இடது புறமும் ஏராளமான குறுக்குச் சாலைகள் உள்ளது.

    இதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் தூரத்தில் இருசக்கர வாகனம் வருவதை பார்த்து, திடீரென வழிமறிக்கின்றனர். அப்போது வாகன ஓட்டிகளுக்கு தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மர்ம ஆசாமிகள் மிரட்டி தாக்கி உடைமைகளை பறித்து செல்கின்றனர்.

    கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் இந்த பகுதி வழியாக போத்தனூர் அண்ணாபுரத்தைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி டிரைவர் அப்துல் முஜீப் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பட்டா கத்தியுடன் வழி மறித்த 3 பேர் அப்துல் முஜீப்பை தாக்கி அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    பின்னர் அந்த வாலிபர் இது குறித்து செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். தினசரி தொடரும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    எல்.அண்ட். டி பைபாஸ் சாலையானது ஆள் நடமாட்டம் இல்லாத சாலையாகும். நான்கு சக்கர வாகனங்களும், கனரக வாகனங்களும் ஒரே நேர்கோட்டில் எதையும் பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருக்கும். சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவரை மடக்கி, யாராவது மிரட்டி பேசிக்கொண்டிருந்தால் கூட அதை கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டுதான் இருப்பார்கள்.

    ஆனால் போலீசார் ரோந்து வந்தால் மட்டுமே தான், தேவையில்லாமல் நின்று கொண்டிருப்பவர்கள் யார்? என்று விசாரிப்பார்கள். எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும். இது போன்ற நபர்களை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே எல்.அண்ட்.டி பைபாஸ் ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நிம்மதியாக பயணிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விவசாய நிலத்திலிருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி தாலுகா நெகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (55) விவசாயி. சம்பவத்தன்று ரங்கநாதனுக்கு சொந்தமான விவசாய நிலத்திலிருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு 3 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
    • மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர கோரிக்கை

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி ரோடு சிட்கோவை அடுத்துள்ளது கணேசபுரம். சிட்கோவில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெரும்பாலான இளைஞர்கள் இப்பகுதியில் தான் குடியிருந்து வருகின்றனர். அவர்களில் வட மாநில இளைஞர்களும் ஏராளமானோர் உள்ளனர்.

    சிட்கோவில் இருந்து கணேசபுரம் செல்லும் வழியில் ெரயில்வே கேட் அருகே ஒரு தரைப்பாலம் உள்ளது. தெருவிளக்கு இல்லாத காரணத்தால், இப்பகுதியானது எந்த நேரமும் இருட்டாக காணப்படும்.

    இதனால் அப்பகுதியில் அவ்வப்போது சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பகுதி மக்கள் குறை கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த வழியாக தனியாக செல்லும் பெண்களை மர்ம நபர்கள் குறிவைத்து மிளகாய் பொடி தூவும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    மிளகாய் பொடி கண்ணில் பட்டதும் நிலைகுலையும் பெண்களை குறிவைத்து அவர்களிடம் உள்ள உடைமைகளை கொள்ளையடிக்கும் செயல் நடந்து வருகிறது. பிரதி வாரம் சனிக்கிழமை சம்பள தேதி என்னும் காரணத்தால் சிட்கோ பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் பணப்பழக்கம் இருக்கும். இதனால் சனிக்கிழமைகளில் இந்த சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசனிடம் கேட்டபோது அந்த இடத்தில் இரவு முழுவதும் போலீசாரின் ரோந்து பணி தீவிர படுத்தப்படும்.

    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது உடனே பொதுமக்கள் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார். இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட இந்த இடத்தில், தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், இரவு 11 மணியில் இருந்து 2 மணி வரையிலும் இது போன்ற மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

    சிலர் கூட்டமாக கஞ்சா போதையில் நின்று கொண்டு இருப்பார்கள். தனியாக நடந்து வருபவர்கள் இவர்களை கண்டதும் அச்சப்படுவது இயற்கை. அதனை சாதகமாக பயன்படுத்தி இத்தகைய நபர்கள் வழிபறியிலும் ஈடுபடுவது உண்டு.

    எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் உடனே மின் விளக்கு எரிய செய்ய வேண்டும். இரவு முழுவதும் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியில் இப்பகுதியில் ஈடுபட வேண்டும்.

    அத்துமீறும் இளைஞர்களை பிடித்து, போலீசார் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அதைப் பார்த்து மற்றவர்கள் பயந்து, தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராஜபாளையம் அருகே வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிழவிக்குளத்தை சேர்ந்தவர் கடற்கரை (வயது44). இவர் குடும்பத்து டன் ராஜபாளையத்தில் வசித்து வருகிறார். இதன் காரணமாக கிழவிக்கு ளத்தில் உள்ள வீடு பெரும் பாலான நேரம் பூட்டியே கிடக்கும்.

    ஆயுத பூஜைக்கு கிழவிக் குளத்திற்கு சென்ற கடற்கரை அங்கு பூஜை செய்து விட்டு வீட்டை பூட்டிவிட்டு மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்து விட்டார். வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் நேற்று கிழவிக்குளம் சென்ற கடற்கரை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • சத்தியமங்கலத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • மர்ம நபர்கள் வடமாநிலத்தவராக இருக்கலாம் என்றும், குற்ற சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சத்தியமங்கலத்தில் முக்கிய வீதிகளான எஸ்.ஆர்.டி. கார்னர், வடக்குப்பேட்டை, கோட்டு வீராம் பாளையம், காந்திநகர், மணி கூண்டு உள்ளிட்ட முக்கிய வீதிகள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய பள்ளிவாசல் வீதியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கும் இங்குமாக பரபரப்பாக நடந்து செல்வதும், ஓடுவதும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

    இதனையடுத்து காலையில் வழக்கம் போல் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் வடமாநிலத்தவராக இருக்கலாம் என்றும், குற்ற சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இரவு நேரம் ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 

    • குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

    காவேரிப்பாக்கம்:

    பனப்பாக்கம் அருகே உள்ள துறையூர், உளியநல்லூர், சிறுவ ளையம், பொய்கைநல்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இவர்கள் வேலை முடிந்து திரும்பும்போது கம்பெனி பஸ்சில் இருந்து இறங்கி நள்ளிரவு 12 மணியளவில் பனப்பாக்கத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு செல்கின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு 2 தொழிலாளர்கள் பனப் பாக்கத்திலிருந்து துறையூர் செல்லும்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து அவர்களிட மிருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி நேற்று வழிப் பறிநடந்த துறையூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்ப டுத்தவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

    • பாம்பனில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது
    • பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அண்ணா நகரை சேர்ந்தவர் வில்வஜோதி (வயது32). இவர் கடந்த

    30-ந்தேதி தனது குடும்பத் துடன் சாயல்குடி அருகே ஆ.கரிசல்குளத்தில்உள்ள அரியநாச்சி அம்மன் கோவில் திருவிழாவிற்காக சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அறையின் அலமாரியின் மேல் ஒரு பையில் ைவக்கப்பட்டிருந்த 10 பவுன் கொண்ட டாலருடன் கூடிய தங்க மாலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இந்த நிலையில் திருவிழாவை முடித்து விட்டு ஊர் திரும்பிய வில்வஜோதி, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தங்க மாலை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து வில்வஜோதி கொடுத்த புகாரின்பேரில் பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×