என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி கோவிலில் குவித்த பக்தர்கள் - 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
Byமாலை மலர்10 Dec 2018 4:41 AM GMT (Updated: 10 Dec 2018 4:41 AM GMT)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்ததால், 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய முடிந்தது
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்வார்கள்.
இந்த திருவிழா காலங்கள் மட்டுமின்றி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினங்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில், அய்யப்ப சீசன் தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அதிகாலை முதலே மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் அடிவாரம் பகுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர் கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. இதேபோல் பாதவிநாயகர் கோவில் அருகிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகமாக இருந்தது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்காக வந்த அய்யப்ப பக்தர்கள் தங்கள் வாகனங்களை கிரிவீதிகளில் நிறுத்தினர். இதனால் அடிவாரம் கிரிவீதியில், கிரிவலம் சென்ற பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் பக்தர்கள் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த திருவிழா காலங்கள் மட்டுமின்றி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினங்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில், அய்யப்ப சீசன் தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அதிகாலை முதலே மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் அடிவாரம் பகுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர் கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. இதேபோல் பாதவிநாயகர் கோவில் அருகிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகமாக இருந்தது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்காக வந்த அய்யப்ப பக்தர்கள் தங்கள் வாகனங்களை கிரிவீதிகளில் நிறுத்தினர். இதனால் அடிவாரம் கிரிவீதியில், கிரிவலம் சென்ற பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் பக்தர்கள் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X