என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா: கன்னியாகுமரியில் நாளை தேரோட்டம்
Byமாலை மலர்5 Jun 2017 9:17 AM GMT (Updated: 5 Jun 2017 9:17 AM GMT)
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.
புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 29-ந் தேதி வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, அம்மன் வீதிஉலா நடந்து வருகிறது.
7-ந் திருவிழாவான நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம், வெள்ளி பல்லக்கில் அம்மன் வீதி உலா, மதியம் அன்னதானம், மாலை மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் சிறப்பு அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலை மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு பக்தி பஜனை, அதை தொடர்ந்து பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
9-ம் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலைக்கு நின்றபின் பக்தர்களுக்கு கஞ்சி தர்மமும், அன்னதானமும், மாலை மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் பாரதி தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
7-ந் திருவிழாவான நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம், வெள்ளி பல்லக்கில் அம்மன் வீதி உலா, மதியம் அன்னதானம், மாலை மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் சிறப்பு அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலை மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு பக்தி பஜனை, அதை தொடர்ந்து பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
9-ம் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலைக்கு நின்றபின் பக்தர்களுக்கு கஞ்சி தர்மமும், அன்னதானமும், மாலை மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் பாரதி தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X