என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவிலில் தேரோட்டம்
Byமாலை மலர்3 May 2017 6:00 AM GMT (Updated: 3 May 2017 6:00 AM GMT)
நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவிலில் 10 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவிலில் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 30-ந் தேதி இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் நடராஜர் சிவப்பு சாத்தி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 7.30 மணிக்கு வருசாபிஷேகம் நடந்தது. பகல் 11.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் 4 ரத வீதிகளிலும் வந்து, பகல் 1.30 மணி அளவில் நிலைக்கு வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் முருகன் மற்றும் உலகம்மன் பக்த சேவா குழுவினர் செய்திருந்தனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 30-ந் தேதி இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் நடராஜர் சிவப்பு சாத்தி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 7.30 மணிக்கு வருசாபிஷேகம் நடந்தது. பகல் 11.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் 4 ரத வீதிகளிலும் வந்து, பகல் 1.30 மணி அளவில் நிலைக்கு வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் முருகன் மற்றும் உலகம்மன் பக்த சேவா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X