search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புன்னை நல்லூர் மாரியம்மன் பாட்டு
    X

    புன்னை நல்லூர் மாரியம்மன் பாட்டு

    புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு உகந்த இந்த பாடலை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
    புன்னை நல்லூர் மாரியம்ம்மா
    புவிதனையே காருமம்மா
    தென்னை மரத் தோப்பிலம்மா
    தேடியவர்க் கருளுமம்மா

    வெள்ளைமனம் கொண்ட அம்மா
    பிள்ளை வரம் தாரும் அம்மா
    கள்ளமில்லாக் காளியம்மா
    உள்ளமெல்லாம் நீயே அம்மா

    கண்கண்ட தெய்வம் அம்மா
    கண்நோயைத் தீர்த்திடம்மா
    பெண் தெய்வம் நீயே அம்மா
    பேரின்பம் அளித்திடம்மா

    வேப்பிலையை அணிந்த அம்மா
    வெப்பு நோயை நீக்கிடம்மா
    காப்புதனை அணிந்த அம்மா
    கொப்புளங்கள் ஆற்றிடம்மா

    பாலாபிஷேகம் அம்மா
    பாசத்தினைக் கொடுத்திடம்மா
    காலார நடக்க வைத்தே
    காலனையே விரட்டிடம்மா

    ஆயிரம் பேர் கொண்ட அம்மா
    நோயினின்று காத்திடம்மா
    தாயினது பாசந்தன்னை
    சேய் எனக்கு அருளிடம்மா

    வேனில்கால வேளையம்மா (உந்தன்)
    மேனிதன்னில் வேர்க்குதம்மா
    இளநீரில் குளித்திடம்மா
    இன்னருளை ஈந்திடம்ம்மா

    தேனில் நன்கு குளித்திடம்மா
    வானின் மீது உலவிடம்மா
    வளமார வாழ்ந்திடம்மா
    வாயார வாழ்த்திடம்மா 
    Next Story
    ×