search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
    X

    சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் என்.ஜி.கே. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. பூந்தமல்லியில் படப்பிடிப்பை முடித்து, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

    ராஜமுந்திரியில் என்ஜிகே படப்பிடிப்பில் இருப்பதாக இயக்குநர் செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். சூர்யாவும் படப்பிடிப்பில் பங்கேற்க ராஜமுந்திரி சென்றிருந்தார். படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் கேரவனை நிறுத்தி படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். சூர்யா வந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் சூர்யாவை பார்ப்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் திரண்டனர்.



    கேரவனில் இருந்து இறங்கிய அவரை முற்றுகையிட்டு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் முண்டியடித்தனர். ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறினார்கள். வழிநெடுகிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி இருந்ததால் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சூர்யாவால் செல்ல முடியவில்லை. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து, போலீசாரின் பாதுகாப்புடன் அடுத்த நாள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் சூர்யாவுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சூர்யா படங்களுக்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சிங்கம் படத்தின் மூன்று பாகங்களும் தமிழகத்தை விட ஆந்திராவில் அதிகம் வசூல் பார்த்தன என்பது குறிப்பிடத்தக்கது. #NGK #Suriya

    Next Story
    ×