என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தேசியப் புரட்சிக்குத் தீ வைக்கும், முட்டாள் தனமான விளையாட்டை நிராகரிப்போம் - பாரதிராஜா
Byமாலை மலர்4 April 2018 3:23 PM GMT (Updated: 4 April 2018 3:23 PM GMT)
தேசியப் புரட்சிக்குத் தீ வைக்கும், முட்டாள் தனமான ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டை நிராகரிப்போம் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். #IPL
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டியும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என்று இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் இனிய தமிழ் மக்களே!
நம் இனத்தை அழித்தார்கள், நாம் எதுவும் பேசவில்லை... நம் மொழியை சிதைக்கிறார்கள்... நாம் மௌனமாக இருக்கிறோம்... நம் உரிமைகள் பறிக்கபப்டும் போதும் போராடாமலே இருக்கிறோம். உறைந்து போய்க் கிடக்கும் நம்முடைய உணர்வுகளை உசுப்பிவிட்டு, நம்மைப் புரட்சியாளர்களாய் மாற்ற எத்தனையோ அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கும் போது, ஐபிஎல் என்னும் மாய உலகித்திற்கு நம்மை அடிமைப்படுத்தி நம்முடைய தேசியப் புரட்சிக்குத் தீ வைக்கும், முட்டாள் தனமான விளையாட்டை நிராகரிப்போம்.
தமிழ் மக்களின் ஒற்றுமை கருக்கூடி வரும் போது, கருக்கலைப்பு செய்ய வரும் எந்தவொரு நிகழ்வுக்கும் தடை விதிப்போம்!. ஐபிஎல் என்னும் கிரிக்கெட்டை நிராகரி!. நிறைய வேண்டியது விளையாட்டு மைதானத்தின் இருக்கைகள் அல்ல. புரட்சியின் மைதானம்.
தமிழனை விளையாட்டாக நினைத்து, கிரிக்கெட் விளையாட்டை புகுத்தும் மூடர்களே! எங்கள் தமிழர்களுக்கு வீர விளையாட்டும் தெரியும் என்பதை நினைவில் வையுங்கள். இது எச்சரிக்கை அல்ல, அன்புச் சுற்றறிக்கை.
உங்கள் ஐபில் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை, கொஞ்சம் ஒத்திவையுங்கள். மீறி நடந்தால், அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது. மாறாக, எங்கள் வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் காளைகளோடு களம் காணுவார்கள். என்பதைத் தமிழ் இன உணர்வோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X