என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நாடகத்திற்கும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: கார்த்தி
Byமாலை மலர்22 Jan 2018 3:24 PM GMT (Updated: 22 Jan 2018 3:24 PM GMT)
அறந்தாங்கி அருகே நடந்த நாடக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் கார்த்தி, சினிமாவைப் போல நாடகத்திற்கும் பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளரும் நடிகருமான கார்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
‘இளைய தலை முறையினர் படித்து முடித்தவுடன் வேலை தேடி வெளிநாடு சென்று வருகின்றனர். பெற்றோர்கள் அதைத்தான் விரும்புகின்றனர். என் தந்தை நடிகர் சிவகுமார் சினிமா தொழில் வேண்டாம். வேறு நல்ல வேலை தேடிக்கொள் என்று கூறினார். ஆனால் நடிப்பு மேல் இருந்த ஆர்வத்தால் நான் சினிமாவிற்கு வந்தேன்.
நடிகர் சங்கத்திற்கான கட்டிட பணி நிறைவடைந்தவுடன் நாடக தொழிலை நவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும். நாடகங்களை அனைத்து தரப்பு மக்களும் கண்டு ரசிக்கும் வகையில் தொழில் நுட்ப யுக்திகள் புகுத்தப்படும். சினிமாவை போன்று நாடகத்திற்கும் பொதுமக்கள் அதிக ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X