என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
Byமாலை மலர்21 Nov 2017 11:21 AM GMT (Updated: 21 Nov 2017 11:21 AM GMT)
நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், துபாய் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரபல மலையாள நடிகை, காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அலுவா கிளை சிறையில் திலீப் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவர் ஏறக்குறைய 90 நாட்களுக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெளிநாடு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்ததால், திலீப்பின் பாஸ்போர்ட்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் திலீப்புக்கு எதிராக வரும் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், இம்மாத இறுதியில் துபாயில் உள்ள தனது ஓட்டல் திறப்பு விழாவில் பங்கேற்க வசதியாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், நான்கு நாட்கள் வெளிநாடு சென்று வர திலீப்பிற்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அங்கமாலி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், திலீப்பின் பாஸ்போர்ட்டை 6 நாட்களுக்கு விடுவிக்க வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X