என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பூஜையுடன் தொடங்கியது அண்ணன், தம்பி ஆட்டம்
Byமாலை மலர்9 Nov 2017 10:11 AM GMT (Updated: 9 Nov 2017 10:11 AM GMT)
அண்ணன் சூர்யா தயாரிப்பில் தம்பி கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்க இருக்கிறார்.
'பசங்க' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் பாண்டிராஜ். இயக்குநராக மட்டுமன்றி, வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட இவரது இயக்கத்தில், கடைசியாக சிம்பு, நயன்தாரா நடிப்பில் 'இது நம்ம ஆளு' ரிலீஸானது.
இவருடைய தயாரிப்பில் மற்றும் எழுத்தில் ‘செம’ படம் உருவாகி வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தற்போது பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ளார். கார்த்தி, பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்தில் கார்த்தியின் ஜோடியாக, 'வனமகன்' படத்தில் நடித்த சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்று இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சத்யராஜ், பொன்வண்ணன், ஶ்ரீமன், சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவருடைய தயாரிப்பில் மற்றும் எழுத்தில் ‘செம’ படம் உருவாகி வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தற்போது பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ளார். கார்த்தி, பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்தில் கார்த்தியின் ஜோடியாக, 'வனமகன்' படத்தில் நடித்த சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்று இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சத்யராஜ், பொன்வண்ணன், ஶ்ரீமன், சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X