என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அஜித் ஸ்டைலில் மீண்டு வருவேன்: சிம்பு பட இயக்குனர்
Byமாலை மலர்9 Nov 2017 8:05 AM GMT (Updated: 9 Nov 2017 8:06 AM GMT)
அஜித்தின் ‘விவேகம்’ பட பாணியில் மீண்டு வருவேன் என்று சிம்புவை வைத்து படம் இயக்கிய இயக்குனர் கூறியிருக்கிறார்.
சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதில் சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா நடித்திருந்தார்கள். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 80 சதவீதத்திற்கு மேல் முடிந்தும் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை விமர்சித்தும், இரண்டாம் பாகம் வருமா, வராதா என்று சிம்பு ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி என்று சொல்லியிருக்கிறார்.
மேலும் ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழலிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது. நெவர் எவர் கிவ் அப். என் முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி. நான் மீண்டும் எழுந்து வருவேன்’ என அஜித்தின் ‘விவேகம்’ பட வசனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 80 சதவீதத்திற்கு மேல் முடிந்தும் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை விமர்சித்தும், இரண்டாம் பாகம் வருமா, வராதா என்று சிம்பு ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி என்று சொல்லியிருக்கிறார்.
மேலும் ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழலிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது. நெவர் எவர் கிவ் அப். என் முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி. நான் மீண்டும் எழுந்து வருவேன்’ என அஜித்தின் ‘விவேகம்’ பட வசனத்தை பதிவு செய்திருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X